தேசிய ரீதியில் பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் 10 லட்சம் மரங்களை நடுவதற்கு உரிய அதிகாரிகளின் அனுமதி பெற்று தேசிய ரீதியாக தனது செயற்பாடுகள முன்னெடுத்துச் செல்லும் பாடசாலை மாணவி மின்மினி மின்ஹா அவர்களின் செயற்பாடுகளை
கௌரவித்து கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலயத்துடன் இணைந்து கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகம் நடாத்திய விஷேட நிகழ்வில் குறித்த மாணவிக்கு "Brilliant Child Award " என்ற விருது வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வு பாடசாலை அதிபர் MA. சலாம் தலைமையில் இடம்பெற்றது மேலும் இந்நிகழ்வில் பிரதி அதிபர் E.றினோஸ் ஹஜ்மீன் உதவி அதிபர்களான MRM. முஸாஜித், MHI. இஸ்ஸத், UL.ஹிதாயா MF. நஸ்மியா ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற நிகழ்வில் கல்முனை பிர்லியன் விளையாட்டு கழக தலைவர் MSM. பளீல் மற்றும் கழகத்தின் தவிசாளரும் ஆரம்ப பிரிவு பொறுப்பாசிரியருமானAC. நளீம் ஆகியோரும் சக ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்





