எமது பாடசாலையில் 2023 கல்வியாண்டில் கலை பிரிவில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகம் செல்ல தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் MSM. பைசால் sir (SLPS1) தலைமையில் இன்று இடம் பெற்றது
இந் நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தினர்களினால் சிறந்த சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது இந் நிகழ்வினை க.பொ.த உயர்தர பிரிவு பகுதித் தலைவர் UL.செய்னுலாப்தீன் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார் இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், உதவிய அதிபர், உயர்தர பிரிவு ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், மாணவர்களின் பெற்றோர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.





